கொழும்பு பங்குச் சந்தையில் தொடர் வீழ்ச்சி? வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதே முக்கிய காரணம்?
கொழும்பு பங்குச் சந்தை அண்மைக் காலமாக கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத் தளம்பல், ரூபாயின் மதிப்பு சரிவு, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகெங்கிலும் பரவிய அச்சம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தொடர்ந்து நிகர வெளியேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன.
கொழும்பு பங்குச் சந்தை அண்மைக் காலமாக கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியும், ரூபாயின் மதிப்பு சரிவும், மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களும், உலகெங்கிலும் பரவிய அச்சமும், அதிகரித்து வரும் வட்டி விகிதங்களுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
உலகப் பொருளாதார நிலைமைகள் மற்றும் புதிய வர்த்தகக் கொள்கைகள் குறித்த கவலைகள், நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை போன்றவையும் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதே முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சந்தை நிலவரத்தை விட சற்றுக் குறைவான விலைக்கும் பங்குகளை விற்பனை செய்யத் தலைப்பட்டுள்ளனர்.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் நிகர வெளிநாட்டு வெளியேற்றம் -5,330.78 மில்லியன் ரூபாயாகவும், 2026ஆம் ஆண்டு இதுவரை (Year-to-Date) -25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிகர வெளியேற்றமாகவும் உள்ளது.
2026ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி, கூட்டுப் பங்கு வர்த்தக மாக வீழ்ச்சியடைந்த நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 92.25 மில்லியன் ரூபாய் நிகர வெளியேற்றத்துடன் நிகர விற்பனையாளர்களாக இருந்தனர்.
ஜூன் 6ஆம் திகதி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 113.2 மில்லியன் ரூபாய் நிகர உள்வரவுடன் நிகர் வாங்குவோராக மாறினாலும், முந்தைய நாளின் விற்பனை உணர்வு தொடர்ந்து முதலீட்டாளர் நடவடிக்கைகளைப் பாதித்ததால் சந்தை மேலும் வீழ்ச்சியடைந்தது.
ஜூன் 3ஆம் திகதி, பதற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 410.3 மில்லியன் ரூபாய் நிகர வெளியேற்றத்துடன் நிகர விற்பனையாளர்களாக இருந்தனர். இதே நிலை ஜூன் 4ஆம் திகதியும் தொடர்ந்ததோடு, வெளிநாட்டு விற்பனையாளர்கள் 410.26 மில்லியன் ரூபாய் நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், உள்நாட்டு முதலீட்டாளர்களும் புதிதாகப் பங்குகளில் முதலீடு செய்யவோ, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குகளை வாங்கவோ தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.